முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டைஇழந்து வீட்டுக் கூரைமீது விழுந்து விபத்து.

 


வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீட்டுக் கூரையில் விழுந்து விபத்துக்கு உள்ளான சம்பவம் மாவனெல்லையில் இடம்பெற்றுள்ளது.

அரநாயக்க-மாவனெல்ல வீதியில்  சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி  சாண்ட்மன்னா வளைவில் திரும்பும் போது  வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீட்டின் கூரையின் மேல் விழுந்து விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.