இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.
இவர் ஹிரிகெட்டிய கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
இதன்போது அங்கு இருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர், வெளிநாட்டுப் பிரஜையை காப்பாற்றி முதலுதவி அளித்துள்ளதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.