கதிர்காமம் பெரிய ஆலயத்தில் பாதயாத்திரைக்கான பாதை திறத்தல்- மூடுதல் சம்பந்தமான கூட்டத்தொடரானது மொணறாகலை அரசாங்க அதிபரின் தலைமையில் இடம் பெற்றிருந்தது.



இன்றைய தினம் கதிர்காமம் பெரிய ஆலயத்தில் இடம்பெற்ற பாதயாத்திரைக்கான பாதை திறத்தல்- மூடுதல் சம்பந்தமான கூட்டத்தொடரானது மொணறாகலை அரசாங்க அதிபரின் தலைமையில் இடம் பெற்றிருந்தது. இதில் எதிர்வருகின்ற 2025-06-20 ஆம் திகதி பாதை திறக்கப்படும் என்றும் 2025-07-04 பாதை அடைக்கப்படும் என்று முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றது.
பாதை திறத்தல் மூடுதல் சம்பந்தமான திகதிகளை மாற்றி அமைப்பதற்கு இன்றைய கூட்டத்தொடரில் பாதயாத்திரிகர் சங்கங்கள், பொது அமைப்புகள் கலந்து கொள்ளவில்லை .எமது அமைப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய 22 ஆம் தேதி துறக்க இருந்த பாதை 20 ஆம் தேதியாக மாற்றப்பட்டது அதுமட்டுமில்லாமல் இம்முறை யாத்திரை மேற்கொள்ளுகின்ற அடியவர்கள் யாத்திரையின் போது உக்காத பொருட்களான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் போன்றவற்றை கொண்டு செல்வதை முற்றாக தடுக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கின்றது .ஆகவே யாத்ரை மேற்கொள்ள இருக்கின்ற எமது அன்பு அடியவர்கள் இந்த பாதையின் உடைய புனிதத்தை பாதுகாக்க நாங்களும் இந்த பாதையிலே நல்ல விடயங்களை நல்ல செயற்பாடுகளை செய்வதுதான் பாதையினுடைய புனிதத்தை பாதுகாப்பதற்கும் எதிர்காலத்தில் பத்தாம் நாள்  கால் வைக்க வேண்டும் என்பதை மீட்டெடுப்பதற்கும் வழிவகுக்கும் ஆகவே நாங்கள் ஒன்றுபட வேண்டும் என்று தயவாக வேண்டிக் கொள்கின்றோம்.

 ஓம் நமசிவாய
 அம்பாறை மாவட்ட
சிவதொண்டர் அமைப்பு
தம்பிலுவில்