சுகாதார அமைச்சினால் நாடளாவிய ரீதியில் டெங்கு பரிசோதனை வார செயற்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது
இதேவேளை மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட இனங்காணப்பட்ட இடங்களில் விசேட டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது
மட்டக்களப்பு சுகாதாரசேவை பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பகுதியில் அண்மையில் ஒரு டெங்கு நோயாளி இனம் காணப்பட்டதை அடுத்து
இன்று விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது இதன் போது இரண்டு வீடுகளில் டெங்கு குடம்பிகள் இனம் காணப்பட்டதை அடுத்து அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர் முரளீஸ்வரன் வழிகாட்டலின் கீழ் இந்த செயல் திட்டம்
மாவட்ட தொற்ற நோய்கள் பிரிவின் வைத்திய அதிகாரி எஸ் உதயகுமார் தலைமையில் இந்த டெங்கு பரிசோதனைகள் வீடுகள் வடிகான்கள் பொது இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன
பொதுச்சுகாதார பரிசோதரர்கள் சுற்றாடல் பிரிவின் போலீஸ் அதிகாரிகள் விமானப்படையினர் என பலரும் இன்றைய பரிசோதனை செயற்பாடுகளில் கலந்து கொண்டனர்
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழும் ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் கடலில் கொள்ளையிடப்படுவது தொடர்பில் உயர் மட்ட கலந்துரையாடல் .
வரதன்