
யாழ்ப்பாணம்
செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம்
பாதயாத்திரீகர்கள் நேற்று 27வது நாளில் மட்டு.மாவட்டத்திலுள்ள
செங்கலடியை அடைந்தனர்.
.
யாழ்.
செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கடந்த மே மாதம் 1 ஆம் தேதி புறப்பட்ட
ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் 27தினங்களில் யாழ்ப்பாணம்
கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை ஆகிய நான்கு மாவட்டங்களைக் கடந்து
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளனர்.
இன்று(28) அவர்கள் வரலாற்று பிரசித்தி பெற்ற மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை சென் றடைவர்.
நாளை (29) வியாழக்கிழமை காலை மாமாங்கத்தில் காரைதீவு -
மட்டக்களப்பு வாழ் ஒன்றியத்தினரின் காலை ஆகாரம் வழங்கப்படும்.
மட்டக்களப்பு வாழ் ஒன்றியத்தினரின் காலை ஆகாரம் வழங்கப்படும்.
பின்னர்
குழுவினர் நேரடியாக இராமகிருஷ்ண மிஷன் கல்லடி ஆச்சிரம பொது முகாமையாளர்
சுவாமி நீலமாதவானந்தா ஜீயின் அழைப்பில் அங்கு செல்கிறார்கள். அங்கு
இராமகிருஷ்ண ஆலயத்தில் விசேட பஜனை ஆராதனையுடன் மதிய அன்னதானமும் இடம்
பெறும்.
அங்கு மணிமண்டப
சிவபுரியில் பிற்பகலில் மருத்துவ முகாம் நடாத்த வழமைபோல் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது என சுவாமி நீலமாதவானந்தா ஜீ தெரிவித்தார்.
மழை
வெயிலுக்கு மத்தியில் சுமார் 78 அடியார்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
அவர்களில் சிலருக்கு காய்ச்சல் தடிமன் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வெயில்
கொடூரம் காரணமாக கால்கள் கொப்பளித்துமுள்ளது.
இவர்கள் எதிர்வரும் 03 ஆம் தேதி காரைதீவை சென்றடைவார்கள்.
எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடைவர்.
( வி.ரி.சகாதேவராஜா)