யாழ்ப்பாணம்
செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம் பாதயாத்திரை
இன்று (19) திங்கட்கிழமை திருகோணமலை நகரை அடைந்தது.
வரலாற்று பிரசித்தி பெற்ற திருமலை கோணேசர் ஆலயத்தை தரிசித்த அவர்கள் வில்லூன்றி கந்தசாமி ஆலயத்தில் தங்கினர்.
ஜெயா
வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் 19 தினங்களில் யாழ்ப்பாணம்
கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைக் கடந்து தற்போது திருகோணமலை
மாவட்டத்தில் உள்ளனர்.
( வி.ரி.சகாதேவராஜா)