|
வரலாற்று
பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய
வருடாந்த அலங்கார உற்சவ திருவிழாவின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் நேற்று
முன்தினம் (12) திங்கட்கிழமை சித்ரா பௌர்ணமியன்று சிறப்பாக நடைபெற்றது.
ஆலய
வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்
குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ சபா கோவர்த்தன சர்மாவின்
ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் இடம்பெற்று நிறைவடைந்தது.
ஆலயத்தின்
தலைவர் கி.ஜெயசிறில் ஆலய ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கும்பங்கள்
தாங்க மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து கடற்கரையை அடைந்து தீர்த்தம்
இடம்பெற்றது.
( வி.ரி.சகாதேவராஜா)