சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்-- மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சட்டத்தரணி எம் பி. எம் சுபியான்

                                                                         


 நேற்று இரவு கழுவாஞ்ச்குடியில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட அரிசி தொடர்பாக களுவாஞ்சி குடி போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

 வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள்  தேர்தல் சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும்  பொதுமக்கள் நேரகாலத்துடன் வாக்களித்து விட்டு தங்களது வீடுகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்

 இதேவேளை மாவட்டத்தின் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக  1500க்கும் மேற்பட்ட போலீசாரும் 87  போலீஸ் ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது


இம்முறை விசேட தேவையுடையவர்களுக்காக கண்பார்வை அற்றோர்களுக்காக சிறப்பு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது

 தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப் பாளர் களுடன் தேர்தல் கண்காணிப்பு ரோந்து பணிகளும் இடம் பெற உள்ளது என
  இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில்  மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இவ்வாறு  கருத்துதெரிவித்தார்.



வரதன்