பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.
இரு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான இவர், மாத்தளையில் இருந்து வந்து கடந்த 18ஆம் திகதி வைத்தியசாலையின் 18ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பொலன்னறுவை வைத்தியசாலையின் 23ஆவது வார்டில் 5 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இந்த நோயாளி, (22) பிற்பகல், சிறிய கத்தியால் தனது மார்பு பகுதியை காயப்படுத்தி தற்கொலை செய்து கொண்டார்.
வைத்தியசாலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், நோயின் காரணமாக ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்