கல்லோயா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு மதுபான போத்தல் உற்பத்தி உரிமத்தை உடனடியாக வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சகத்தின் பொது நிர்வாகத் துறை,கலால் ஆணையர் ஜெனரலுக்கு அறிவித்துள்ளது.
ஹிங்குராண சீனித் தொழிற்சாலை தற்போது கல்லோயா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மதுபான போத்தல் உரிமம் வழங்கப்பட வேண்டும் என்று இந்தக் கடிதம் கூறுகிறது.
ஹிங்குராண சர்க்கரை நிறுவனத்தின் கீழ் இருந்த மதுபான போத்தல் வணிகம் தற்போது பூகொட பகுதியில் வேறொரு தரப்பினரால் மேற்கொள்ளப்படுகிறது.
கல்லோய நிறுவனம் நாட்டின் ஒரு முக்கிய தொழிலதிபருக்குச் சொந்தமானது எனவும் அவர் தற்போதய அரசுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை கொண்டவர் எனவும் கூறப்பட்டுள்ளது.