"ஒபட்ட கெயக்- ரட்டட ஹெட்டக்" செமட்ட நிவஹண தொணிப்பொருளில் மானிய
வீடமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் தேசிய வீடமைப்பு
அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில்
நடைபெற்றது.
இலங்கையில் வசிக்கும் அனைவருக்கும் வீடு என்ற தேசிய
மக்கள் சக்தியின் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்த நிகழ்வு
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மானிய விடமைப்பு திட்டத்திற்கு தெரிவு
செய்யப்பட்ட 42 பயனாளிகளுக்கு முதற்கட்ட காசோலை மற்றும் சான்றிதழ்கள்
வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
தேசிய கூட்டமைப்பு அபிவிருத்தி
அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் தங்கதுரை சுபாஷ்கரன்
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு,
தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் திலகநாதன், மகளிர் அணி
தலைவி வனிதா, திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து
கொண்டனர்.
இந்த மானிய வீட்டு திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 42
பயனாளிகளுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படுவதுடன் முதல்
கட்டமாக ஒன்றரை லட்சம் ரூபாயும் இரண்டாம் கட்டமாக இரண்டரை லட்சம் ரூபாவும்
மூன்றாம் கட்டமாக இரண்டு லட்சம் ரூபாயும் நான்காம் கட்டமாக இரண்டரை லட்சம்
ரூபாயும் 5 ஆம் கட்டமாக ஒன்றரை லட்சம் ரூபாயும் ஐந்து கட்டங்களாக
வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வரதன்