பெண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்
தென் கொரியாவின் குமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 26ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் நடைபெற்ற பெண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டது.
குறித்த போட்டியை நிறைவு செய்ய 3 நிமிடங்கள் 36.67 செக்கன்களை இலங்கை அணி எடுத்துக் கொண்டது. வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் சயுரி மெண்டிஸ், நதீஷா ராமநாயக்க, ஜயேஷி உத்தரா மற்றும் நிஷேந்த்ரா ஹர்ஷனி பெர்னாண்டோ ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.
2 ஆண்டுகளுக்கு முன்னர் பாங்கொக்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை சாதனையுடன் இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
எனினும், இம்முறை இலங்கை அணியால் வெண்கலப் பதக்கத்தையே வெல்ல முடிந்தது.