முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம் உல் அஸிஸுக்கும் இடையிலான நட்புறவு விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
பாகிஸ்தான் தான் தேவைப்படும் நேரத்தில் இலங்கையை ஆதரித்த எங்களின் நெருங்கிய நண்பர் என இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகநூலில் கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ
நாட்டில் போர்ச்சூழல் நிலவிய மிக இக்கட்டான காலக்கட்டத்தில் பாகிஸ்தான் நமது நாட்டிற்கு ஆதரவாக இருந்ததால் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டனஎ .
இலங்கைக்கான அப்போதைய பாகிஸ்தான் தூதரை கொழும்பில் பயங்கரவாதிகள் படுகொலை செய்ய முயன்றனர், ஆனால் அது தோல்வியடைந்தது.
நட்புறவு கொண்ட அண்டை நாடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நமது நாடு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் மேலும் வலுப்பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஒரு பழைய நண்பரின் வருகை கடந்த கால நினைவுகளை கொண்டு வந்ததை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.