மின்சாரக் கட்டணம் முப்பத்தைந்து சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்க்கட்சி கூறினாலும், உண்மையில் அந்த அதிகரிப்பு பதினெட்டு சதவீதமாக இருக்கும் என்று நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் டாக்டர் அனுர கருணாதிலக்க இன்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், குடிநீர் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நீர் மசோதா தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
திரு அனுர கருணாதிலக மேலும் கூறியதாவது:
குடிநீர் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமில்லை. தண்ணீர் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்தார். அந்த அறிக்கை எந்த மூலத்தை அடிப்படையாகக் கொண்டது? என கேள்வி எழுப்பிய அவர் குடிநீர் கட்டணத்தை அதிகரிக்க தேவை ஏற்படாது என தான் நம்புவதாக அவர் கூறினார்.