நுவரெலியா கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அந்த பஸ்ஸூக்கு அடியில் சிக்கிக்கொண்ட பெண்ணொருவர், தன்னுடைய குழந்தையை காப்பாற்றியுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைராகியுள்ளது.
சர்வதேச அன்னையர் தினம், இன்றாகும். (ஞாயிற்றுக்கிழமை )இந்த தினத்தில்
பெரும் மதிப்புக்கு உரிய தாய் என்று பலரும் அந்தத் தாய்க்கு
வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்.