
லண்டன் கிரிஃபின் கல்லூரி சர்வதேச நுண்கலை தேர்வு ஆணையமும் ,மட்டக்களப்பு திருமதி சசிகலாராணி ஜெயராம் அவர்களின் கலார்ப்பனா பரத நாட்டிய கலைக்கூட மாணவிகளான செல்வி துளசிதாசன் ஹிமர்த்திகா , சிவகோணேஸ்வரன் விகாஷினி ,கமலநாதன் கமலாக்ஷினி மற்றும் குமாரசிங்கம் அங்கவி ஆகிய மாணவிகள் இணைந்து மட்டக்களப்பு சிவானந்தா வித்யாலய கலாச்சார மண்டபத்தில் "ஆற்றுகை" நிகழ்வை பெருமையுடன் முன்னெடுத்திருந்தார்கள் .
ஆற்றுகை நிகழ்வுக்கு பிரதான அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயப்பணிப்பாளர் திருமதி ஷாமினி ரவிராஜ் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர் .
கலார்ப்பனா பரத நாட்டிய கலைக்கூட நிறுவனர் திருமதி சசிகலாராணி ஜெயராம் அவர்களின் நெறியாள்கையில் ஆற்றுகை நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.
பெற்றோர்கள் ஆசியுரை வழங்க , இறை வழிபாட்டுடன் ஆற்றுகை ஆரம்பமானது .
திருமதி சசிகலாராணி ஜெயராம் அவர்களின் கலார்ப்பனா பரத நாட்டிய கலைக்கூட மாணவிகள் நால்வர் ஆற்றுகையை மிக சிறப்பாக அரங்கேற்றிருந்தார்கள் .
நிகழ்வின் முடிவில் மாணவிகளுக்கும் , பங்கு பற்றிய கலைஞர்களுக்கும் , கலை ஆர்வலர்களாலும் ,பெற்றோகளாலும் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
FREELANCER
