இந்து மக்களின் வாழ்வில் வருடத்தில் வருகின்ற பௌர்ணமி களில் விசேட
தினமான சித்திரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம் பெற்றன.
இந்து மக்களின் வாழ்வில் தாயை இழந்தவர்கள் இன்று விரதம் இருந்து பிதிர் கடன் செலுத்தும் நாளாகவும் இன்றைய பௌர்ணமி நாள் அமைகின்றது , இதே வேளை சித்திரகுப்தன் பிறந்த நாளாகவும் அமைவதால் மனிதனின் வாழ்வில் மரணத்தின் பாவ புண்ணியங்களுக்கு அமைய அவர்களுக்குரிய பலன்கள் கிடைக்கப் பெறுகின்ற நாளாகவும் அமைகின்றது
இன்றைய நாளில் ஆலயங்களில் விசேட சித்திரா கஞ்சி காய்ச்சுகின்ற நிகழ்வும் சித்திரைகதை படிக்கும் நிகழ்வும் விசேட பூஜைகளும் முன்னெடுக்கப்
படுகின்றது
இதேவேளை மட்டக்களப்பு வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திலும் இன்று நண்பகல் சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ முரசொலி மாறன் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
வரதன்