யானை தாக்குதலுக்கு உள்ளாகி 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 


திருகோணமலை மாவட்டம், கோமரங்கடவெல - திக்கட்டுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.