யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள்
22 நாட்களில் 04 மாவட்டங்களை கடந்து மட்டு.மாவட்டத்திற்குள் இன்று (23) 23 வது நாள் வெள்ளிக்கிழமை பிரவேசித்தனர்.
.
யாழ்.
செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கடந்த மே மாதம் 1 ஆம் தேதி புறப்பட்ட
ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் 23 தினங்களில் யாழ்ப்பாணம்
கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை ஆகிய நான்கு மாவட்டங்களைக் கடந்து
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரவேசித்துள்ளனர்.
வெருகல் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் வெள்ளி பூஜையில் கலந்து கொண்டனர்.
மழை வெயிலுக்கு மத்தியில் சுமார் 100 அடியார்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடைவர்.
( வி.ரி.சகாதேவராஜா)