முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு வாரத்தின் முதலாம் நாளினை நினைவுகூறும் முகமாக ''முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் நிகழ்வொன்று
இன்று (12) திகதி மட்டக்களப்பு சந்துருக் கொண்டான் நினைவுத்தூபி முன்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பொங்கு தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி முன்பாக ''முள்ளிவாய்க்கால் கஞ்சி" காய்ச்சப்பட்டு வீதியால் சென்ற மக்களுக்கு வழங்கப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஶ்ரீநாத் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரினால் நினைவுத்தூபியில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு இறந்த உறவுகளின் ஆத்மா சாந்திக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் பாற் சோறு கஞ்சி, வீதியால் பயணித்த மக்களுக்கும் வழங்கி வைத்தனர்.
இதன் போது குறித்த நிகழ்வில் சிவில் உடையில் படமெடுத்த பொலில் அதிகாரியை பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் படமெடுப்பதை நிறுத்துமாறு உரத்த தொனியில் சத்தமிட்டு கேட்டபோது பொலிஸ் அதிகாரி வேகமாக குறித்த இடத்தை விட்டு விலகிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.