இன அழிப்பிற்கு சர்வதேசமே தீர்வு தர வேண்டும், அதற்காகவே நாங்கள் 16 வருடங்களாக கண்ணீரோடு காத்திருக்கின்றோம் என வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உப தலைவியும், மட்டக்களப்பு மாவட்ட தலைவியுமாகிய அமலராஜ்
அமலநாயகி மட்டு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இங்கை அரசின் இன அழிப்பு நாள் மே 18 அதை எம்மால் ஒருபோதும் மறந்து விட முடியாது, அதனை முன்னிட்டு எதிர்வரும் 12 திகதி தொடக்கம் 18 திகதி வரை இன அழிப்பு வாரத்தை முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பினையும் வழங்குமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
16 வருடங்கள் கடந்தும் சர்வதேசமும் எம்மை மறந்திருப்பதை நீனைத்து நாம் வேதனையடைகின்றோம்.
உப்பில்லா கஞ்சி கூட கிடைக்காமல் உயிரிழந்த எமது உறவுகளை நாங்கள் இந்த வாரத்தில் நினைவு கூறவுள்ளோம்.
இந்த இன அழிப்பு வார காலத்தில் கழியாட்ட நிகழ்வுளை நிறுத்தி உயிர் நீர்த்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியத்திற்காக பயணிப்போர் உள்ளிட்ட அனைவரும் முன் வர வேண்டும்.
முள்ளிவாய்க்காலை எம்மால் மறந்து விட முடியாது. குறித்த வாரம் முழுவதும் அனைத்து இடங்களிலும் உப்பில்லாத கஞ்சியினை வழங்க அனைவரும் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
16 வருடங்களாக எங்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (OMP) அலுவலகம் கூட ஒரு கண்துடைப்பு நாடகத்தையே அரங்கேற்றியிருக்கிறது.
அனுர குமாரதிஷாநாயக்க தேர்தல் காலத்தில் சொல்லும் பிரச்சாரம் வேறு அதேவேளை சர்வதேசத்தில் சென்று அவர் கூறுவது வேறென் றாகவே இருக்கின்றது.
குற்றம் செய்த அரசிடம் நாங்கள் எப்படி நீதி கோறுவது? சர்வதேசத்திடமே நாங்கள் நீதியை கேட்கலாம்.
இந்த அரசாங்கமும் இராணுவ கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு எங்களை கூட சுதந்திரமாக நடமாட முடியாமல் பல புலனாய்வாளர்களை விட்டு எம்மை பின்தொடர்கின்றனர்.
எமக்கு எந்த அபிவிருத்தியும் தேவையில்லை, பெண் தலைமை தாங்கும் பல குடும்பங்களுக்கு QR காசைக் கூட தராமல் மறுக்கின்றனர்.
இந்த இன அழிப்பிற்கு சர்வதேசமே தீர்வு தர வேண்டும் அதற்காகவே நாங்கள் 16 வருடங்களாக கண்ணீரோடு காத்திருக்கின்றோம் என்றார்.