சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 133வது ஜனன தினத்தை முன்னிட்டு நீரூற்று பூங்கா விபுலாநந்த அடிகளாரின் திருஉருவச் சிலைக்கு மாநகர ஆணையாளர் மலரஞ்சலி செலுத்தினார் .

 


 









 
 உலகின் முதல் தமிழ் பேராசிரியரும்   முத்தமிழ்  வித்தகரும் சிவாநந்த வித்தியாலய ஸ்தாபகருமான சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 133வது ஜனன தினத்தை முன்னிட்டு  கிழக்கில் பல இடங்களில்   ஜனன தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன .
இன்று  காலை மட்டக்களப்பு  கல்லடி-உப்போடை விபுலாநந்த மணி மண்டப  வளாகத்தில் அமைந்துள்ள   அடிகளாரின் சமாதியில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம் பெற்றது .
அதனை தொடர்ந்து  மட்டக்களப்பு நகரில்   அமையப்பெற்ற நீரூற்று பூங்கா விபுலாநந்த அடிகளாரின்  திருஉருவச் சிலைக்கு மாநகர ஆணையாளர்  M.தனஞ்ஜெயன்  மலரஞ்சலி செலுத்தினார் .
இவ் நிகழ்வின் போது
சுவாமி விபுலாநந்தர்  நூற்றாண்டு விழாச்சபை தலைவர் க.பாஸ்கரன் ,  உப தலைவர் திருமதி திலகவதி ஹரிதாஸ்
பொதுச்செயலாளர் ச.ஜெயராஜா  , மற்றும் பொருளாளர் த.யுவராஜன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.