தேர்தல் திணைக்களத்தின் அனுமதியுடன் இன்று மட்டக்களப்பு மாநகர சபையின் பணிகளை விரைவாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பதற்காக
புதிய அரசாங்கத்தினால் சுமார் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த மாநகர சபை புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு மாநகர சபையின் ஆணையாளர் என் தனஞ்ஜெயன் தலைமையில் இன்று காலை சபை வளாகத்தில் இடம்பெற்றது
நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு சமய வழிபாடுகளின் பின் பிரதம அதிதியாக கலந்து கொண்டவர்களினால் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது
இன்றைய இந்த நிகழ்விற்கு மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர்கள் பிரதேச செயலாளர் அரச உயர் அதிகாரிகள் சபையின் உயர் அதிகாரிகள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வரதன்