காத்தான்குடி 5ம் குறிச்சி எஸ்.எம்.லேன் முகவரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மர்சூக் றசீதா தம்பதிகளின் புதல்வி யான இந்த மாணவி பொருளியல் கணக்கீடு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.
இவர் GCE A/L கற்கும் போதே AAT கற்கை நெறியினை Digital Tutors LK நிறுவனத்தில் Online மூலமாக கற்று பூர்த்தி செய்ததுடன் அகில இலங்கை ரீதியிலும் Business Communication பாடத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
இவருக்கு Digital Tutors LK நிறுவனம் AAT மற்றும் GCE A/L தொடர்பில் மேலதிக வழிகாட்டலினையும் வழங்கியிருந்தது.
இவரின் தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியர் தாய் காத்தான்குடி நகர சபை முகாமைத்துவ உதவியாளர் சகோதரர் கணக்காய்வு உத்தியோகத்தராக மட்டக்களப்பு அலுவலகத்தில் கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





