நிர்வாக சேவை விசேட தரத்திற்கு தேர்வான 23 அதிகாரிகளில் 14 பேர் தமிழர்கள் .

 


இலங்கை நிர்வாகசேவை தரம் 1ஐச் சேர்ந்த 23 அதிகாரிகள் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நிர்வாக சேவை விசேட தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நிர்வாக சேவை விசேட தரத்திற்கு தேர்வான 23 அதகாரிகளில் 14 பேர் தமிழர்கள் எனவும் ஒருவர் முஸ்லிம், 8 பேர் சிங்களவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025-01-01 முதல் இந்தத் தர உயர்வு அமுலாகும் என  கடந்த 25ஆம் திகதி ஆணைக்குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பெறுவோர் பட்டியலில் எஸ்.சிவசிறி, எஸ்.முரளிதரன், எஸ். அச்சுதன், கே.சிறிமோகன், என்.மணிவண்ணன், என்.சிவலிங்கம், ரி.திரேஸ்குமார். ஏ.சோதிநாதன், சுபாகினி மதியழகன், எஸ்.சத்தியசீலன், பி.தயானந்தன், வை.பரந்தாமன், எம். சிறிஸ்காந்தகுமார் மற்றும் வி.மதுமதி ஆகியோரின் பெயர்கள்  உள்ளமை குறிப்பிடத்தக்கது.