


FREELANCER
புத்த சாசன மதம் மற்றும் கலாசார அலுவலர்கள் அமைச்சின் மண்முனை வடக்கு
கலாசார மத்திய நிலைய மணவாளர்கள் மாணவர்கள் உத்தியோகத்தர்கள் இணைந்து
நடாத்திய பாஸ்கு நாட்டிய நாடக நிகழ்வு -2025 மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதய நாதர் ஆலய முன்றலில் இடம் பெற்றது
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி ஜே.ஜே. முரளிதரன் அம்மணி அவர்களும்
இந்நிகழ்விற்கு கௌரவ அதிதியாக திருமதி கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி அம்மணி அவர்களும் பங்கேற்றிருந்தனர்
இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை. ஜீவரத்னம் ஜார்ஜ் ஜீவராஜ் அடிகளாரும்
மட்டக்களப்பு மறை மாவட்ட நிதிப் பொறுப்பாளர் அருட்தந்தை மரியான் தம்பி ஸ்டனிஸ் லாஸ் அடிகளாரும்
திருஇருதயநாதர் பங்குத்தந்தை
அருட்தந்தை கிளமெண்ட்.வி. அன்னதாஸ் அடிகளாரும் கலந்து கொண்டனர்.
அத்தோடு கலாசார மத்திய நிலைய மாணவர்கள் கலைஞர்கள் என சுமார் 80 பேர் கலந்து கொண்டனர்.
பாஸ்கு நாட்டிய நாடகத்தில் பங்கேற்றிருந்த கலைஞர்கள் , மற்றும் மாணவர்களுக்கு அதிதிகளால் நினைவுபரிசுகள் வழங்கப்பட்டன .
புனித வாரத்தினை முன்னிட்டு இந்நிகழ்வானது சிறப்பாக அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.