மின்சாரம் தாக்கியதில் ஒரே இடத்தில மூவர் உயிரிழந்துள்ளனர்.

 


புத்தளம் - பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில்  (29) மாலை மின்சாரம் தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில்  பலஞ்சியின் மீது மின்சாரம் பாய்ந்ததில் அதனை தூக்கிச் சென்ற 4 பேர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

இருப்பினும், அவர்களில் ஒருவர் தூக்கி விசப்பட்ட நிலையில், உயிர் பிழைத்துள்ளார்.

எனினும் ஏனைய மூவரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.