தெற்கில் உள்ள அரசியல் கட்சிகள், வடக்கு
மக்களை கவரக்கூடிய சூழலை உருவாக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவின் கனவு தற்போதைய அரசாங்கத்தின் வெற்றியின் மூலம் நனவாகியுள்ளதாக
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்
நாமல் ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டை மீண்டும் பிரிவினைவாதத்திற்கு இட்டுச் செல்லும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடமளிக்காது என நாமல் ராஜபக்ஷ விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.





