இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளராக ஞா.ஸ்ரீநேசன் தெரிவு.


 

 

 

 


 

(கல்லடி செய்தியாளர்)

 

 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளராக ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற அமர்வின் பின்னர் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற போதே ஞா.ஸ்ரீநேசன் ஊடகப் பேச்சாளராகத் தெரிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.