தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது இடம்பெற்று வருகிறது.
- பிரதமர் – ஹரிணி அமரசூரிய
- கல்வி அமைச்சர் – ஹரிணி அமரசூரிய
- வெளிவிவகார அமைச்சர் – விஜித ஹேரத்
- பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் – சந்தன அபேரத்ன
- நீதி அமைச்சர் – ஹர்ஷன நாணயக்கார
- மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் – சரோஜா போல்ராஜ்
- கமத்தொழில், கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் – கே.டி.லால் காந்த
- நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் -அநுர கருணாதிலக
- கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் – இராமலிங்கம் சந்திர சேகர்
- கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் – உபாலி பன்னிலகே
- கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அமைச்சர் -சுனில் ஹந்துன்நெத்தி
- பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் -ஆனந்த விஜேபால
- போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் – பிமல் ரத்னாயக்க
- புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு – ஹிநிந்துமா சுனில் செனிவி
- சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் – நலிந்த ஜயதிஸ்ஸ
- பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு – சமந்த வித்தியாரத்ன
- இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் – சுனில் குமார கமகே
- வர்த்தக, வாணிப, உணவுப்பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் – வசந்த சமரசிங்க
- விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் – க்ரிஷாந்த அபயசேன
- தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ
- வலுசக்தி அமைச்சர் – குமார ஜயகொடி
- சுற்றாடல் அமைச்சர் – தம்மிக்க பட்டபெதி





