FREELANCER
வரலாற்று சிறப்புமிக்க கிழக்கிலங்கை மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 01/07/2024 அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 2024.07.22. காலை தீர்த்தோற்சவதுடன் திருவிழா நிறைவு பெற உள்ள நிலையில் , மட்டக்களப்பின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் ஆலயத்துக்கு பாத யாத்திரையாகவும் , வாகனங்கள் மூலமாகவும் ஆலய தரிசனத்துக்காக பயணித்துக்கொண்டுள்ளனர் .
பக்தர்களின் தாக சாந்திக்காகவும் , பசியைப்போக்கும் நோக்கத்துடனும் மட்டக்களப்பு மண்முனை மேற்கு அரசினர் பாடசாலையின் ஒழுங்குபடுத்தலில் அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் பாற்சோறு மற்றும் தேநீர் பரிமாறப்பட்டது .