ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ,பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது

 


 

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
 
பரீட்சைகள் திணைக்களத்தை உள்ளடக்கிய உப குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.