(கல்லடி செய்தியாளர்)
மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தில் போதைப் பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கு முதுமாணிப் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் வழிகாட்டுதலின் கீழ்
மாவட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்காகன முதுமாணி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியானது மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் மாவட்ட போதைப் பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஷின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை (25) இடம் பெற்றது.
நான்கு மாதங்களைக் கொண்ட இப் பயிற்சி நெறியில் தெரிவு செய்யப்பட்ட 50 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் போதைப் பொருள் முற்தடுப்பு செயற்றிட்டத்தை வலுவூட்டும் செயற்றிட்டமாக இப் பயிற்சிப் பாசறை அமையவுள்ளது.
கிராம, பிரதேச மட்டத்தில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு தேவையாக விழிப்புணர்வுகள் இவ் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் வளவாளராக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய சிரேஷ்ட நிகழ்ச்சி அதிகாரி ஏ.சி.றஹீம், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள், சமூதாயாசார் சீர்திருத்த உத்தியோகத்தர்கள், என பலர் கலந்து கொண்டனர்.