மீள் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு வெளிச்ச வீட்டினை கிழக்கு ஆளுநர் திறந்து வைத்தார்.

 

 


 


 


 


 


 


 








FREELANCER



 கடந்த 2024 05 .04  அன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா   மட்டக்களப்பு  முகத்துவாரம் வெளிச்ச வீட்டு (லைட்ஹவுஸ் ) பகுதிக்கு  விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் .

 கடந்த  20வருடங்களுக்கு மேலாக வர்ணம் பூசப்படாமலும்    அதே நேரம்   வெளிச்சவீடு   புனரமைக்கப்பட வேண்டிய   கட்டாய தேவை இருப்பதை  பிரதேச பொதுமக்களும் , மீனவர் சமூகமும்    அமைச்சருக்கு  சுட்டிக்காட்டினர், அவர்களின் கோரிக்கையினை செவிமடுத்த அமைச்சர்
 உடனடியாக  வெளிச்ச வீட்டை   புனரமைக்க    நடவடிக்கை மேற்கொள்ளுமாறு     சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார் .
அதனடிப்படையில்  துரித கெதியில் வெளிச்ச வீடு   புனரமைக்கப்பட்டது
நேற்றைய    தினம் மீள் புனரமைக்கப்பட்ட வெளிச்ச வீட்டினை கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார் , இவ் நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ,  மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் சிவலிங்கம் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் .