தஜிகிஸ்தானில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை .

 


மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.  அத்துடன் முக்கிய பண்டிகைகள் கொண்டாடுவதற்கான  தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு  அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தடையை மீறி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இந்திய மதிப்பில் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என  தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு   , அரசின் இந்த புதிய சட்டங்களை மீறினால் அரசு அதிகாரிகளுக்கு 3 லட்சமும் மத தலைவர்களுக்கு 5 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் எனவும் தொிவித்துள்ளது

தஜிகிஸ்தான் அரசாங்கம் 2007 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சு  இஸ்லாமிய உடை மற்றும் மேற்கத்திய பாணி குட்டைப் பாவாடை இரண்டையும் மாணவர்களுக்கு தடை செய்தபோது ஹிஜாப் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருந்ததும்   குறிப்பிடத்தக்கது.

1991 ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த போது உருவான தஜிகிஸ்தான்  நாட்டில் ஒரு  கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்நாட்டில் 96 சதவீதம் இஸ்லாமியர்கள்  வசிக்கின்றனர்.

கொசோவோ, அஜர்பைஜான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் உட்பட பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில்  அரசாங்க அதிகாரிகளுக்கு புர்கா மற்றும் ஹிஜாபை தடை செய்துள்ளன