கடலில் படகு ஒன்று கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்

 


ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸல கடலில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து  (11) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.