தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் சில பகுதிகளில் உள்ள மதுபானசாலைகள் ஒருவாரத்துக்கு மூடப்பட உள்ளது

 


நாட்டின் சில பகுதிகளில் உள்ள  மதுபானசாலைகளை 7 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை  இவ்வாறு மதுபான நிலையங்கள் மூடப்படவுள்ளன.

தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு இந்த நாட்களில் மதுபான நிலையங்கள் மூடப்படும் என இலங்கை கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய நுவரகம், கிழக்கு நுவரகம்  மற்றும் மிஹிந்தலை பிரிவு 03 ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் அக்காலப்பகுதியில் மூடப்படவுள்ளன.