ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

 

 


முல்லைத்தீவில் இருந்து  ஒரே குடும்பத்தை சேர்ந்த   ஆறு பேர் புதன்கிழமை(5) அதிகாலை இராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை(4) முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று  மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் புறப்பட்டு புதன்கிழமை(5) அதிகாலை இராமேஸ்வரம் அடுத்த சேராங் கோட்டையை சென்றடைந்துள்ளனர்.

தாய் தந்தை மற்றும் நான்கு பிள்ளைகள் உள்ளடங்களாக 6 பேர் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கை தமிழர்கள் ஆறு பேரையும் மீட்ட மரைன் பொலிஸார் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.