ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக பொசன் பூரணை தினத்தினை முன்னிட்டு மட்டு.சிறையிலிருந்த 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் .

 


 


 (கல்லடி செய்தியாளர்)

 

 பொசன் பூரணை தினத்தினை முன்னிட்டு அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 7 ஆண் கைதிகள் இன்று வெள்ளிக்கிழமை (21) பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இக்கைதிகள் இன்று காலை 10.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சிறைச்சாலையின் பதில் பிரதம ஜெயிலர் ஜே.சி.ஹென்றி உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்று வந்த கைதிகளே
இவ்வாறு பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன்  ஊடகங்களுக்கு  தெரிவித்திருந்தார்