பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

 

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அமைவாக, நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான கல்விசாரா ஊழியர்கள் தற்போது கொழும்பு 7 இல் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம்  காரணமாக, நகர மண்டப பகுதியில் உள்ள அனைத்து வீதிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.