பல்கலைக்கழக
கல்விசாரா ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்புப்
போராட்டத்திற்கு அமைவாக, நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும்
பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான கல்விசாரா ஊழியர்கள் தற்போது
கொழும்பு 7 இல் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த
ஆர்ப்பாட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம்
காரணமாக, நகர மண்டப பகுதியில் உள்ள அனைத்து வீதிகளின் போக்குவரத்தும்
பாதிக்கப்பட்டுள்ளன.