செயற்கை இனிப்பு கலந்த பானங்களை குடிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படும்?

 


தற்போதைய வெப்பமான காலநிலையில் செயற்கை இனிப்பு கலந்த பானங்களை குடிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

செயற்கை இனிப்பு பானங்களை குடிப்பதால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை அதிகரிக்கும்.

செயற்கை இனிப்பு பானங்களில் அதிக அளவு சர்க்கரை இருப்பதே இதற்குக் காரணம்.

வெப்பமான காலநிலையில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பது மிகவும் முக்கியம்.

கடினமான செயல்களை முடிந்தவரை தவிர்ப்பது மிகவும் அவசியம் என செயலாளர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில், இயற்கை திரவங்களை அதிகம் குடிப்பது மிகவும் அவசியம்.

முடிந்தவரை குளிர்ந்த நீர், பல்வேறு வகையான பழச்சாறுகள், ஆரஞ்சு நீர், இளநீர் மற்றும் இயற்கை பானங்கள் அருந்துவது மிகவும் அவசியம்.

நாளொன்றுக்கு பல தடவைகள் குளிர்ந்த நீரால் உடலை நனைப்பது மிகவும் அவசியம் எனவும், ஆரோக்கியமான குழந்தைகளை முடிந்தவரை தண்ணீரில் வைத்திருப்பது மிகவும் அவசியம் எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.