வரதன்
அரசாங்கமும், ஜனாதிபதியும் இன்னும் பலரும் கூட்டாக மேற்கொண்ட கடின உழைப்பால் தற்போது நாடு படிப்படியாக பொருளாதார வளர்ற்சியில்கண்டு வருகின்றது
என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்
. மட்டக்களப்பு மாவட்டம் எருவில் பிறீடம் விளையாட்டுக் கழகத்தின் 10வது ஆண்டு நிறைவும், சிறப்பு விளையாட்டு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை(05.05.2024) மாலை நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..
நாடு மோசமான பொருளாதார சூழ்நிலையில் இருந்ததை அனவரும் அறிவார்கள். எரிபொருட்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. பணமிருந்தும் பொருட்களை வாங்க முடியாத நிலமை இருந்தது. இதனால் பலர் நாட்டையே விட்டு வெளியேறினார்கள். இதனால் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்குள்ளே எமது நாடு சென்றிருந்தது.
பொருளாதார வீழ்சசியைச் சந்தித்த பல நாடுகள், 50 வருடகாலமாகவும் உலகத்தில் எழவில்லை. ஐரோப்பிய நாடுகளில்கூட விலைவாசிகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கூட கொவிற் தொற்றுக்குப் பின்னர் பணவீக்கம் பாரிய பிரச்சனையாக இருந்தது
தற்போது 400 ரூபாவாக இருந்த டொலர் 298 ரூபாவிற்கும், 460 ரூபாவாக இருந்த யூரோ 316 ரூபாவாகவும் குறைந்துள்ளது. எனவே படிப்படியாக நாடு வளர்ற்சிகண்டு வருகின்றது. இருந்தாலும் மக்களின் வாழ்க்கைச்சுமை குறையவில்லை, இது பெரியகவலையான விடையமாகும். இது குறையவேண்டும் அதைத்தான் அரசாங்கமும், ஜனாதிபதியும் விரும்புகின்றனர். அதற்காக பொருட்களின் விலை வெகுவாக் குறைக்கப்படல் வேண்டும். விலைவாசியைக் குறைப்பதற்காக உற்பத்திதிட்டங்களை இந்த வருடத்திற்குரிய வரவு செலவுத்திட்டத்தில், நிதியை ஒதுக்கீடு செய்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் வேகமாக முன்னெடுக்கின்றது.
அதுபோல் காணி உறுத்திப்பத்திரம் இல்லாதவர்களுக்கு காணி உறுத்திப்பத்திரங்களை வழங்கி வைக்கும் முக்கிய வேலைத்திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகின்றது. எனினும் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக மேம்படுத்த வேண்டும் என்பதுதான் எமது அனைவரினதும் ஒட்டுமொத்தமான நோக்கமாகும். அதற்காக வேண்டி நாம் தொடர்ற்சியான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது கிராம பெரியோர்கள், பொதுமக்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.