மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான கராத்தே போட்டிகள் .

 










கிழக்கு மாகாண விளையாட்டுத்  திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான கராத்தே போட்டிகள் (05)ஞாயிற்றுக்கிழமை  காலை மட்டக்களப்பு வெபர் உள்ளரங்கு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

 மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ். பிரணவன்
மாகான விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்வரன் விளையாட்டு பிரதான போதனாசிரியர்கள்
உட்பட கராத்தே நடுவர்கள் கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கராத்தே போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப்பரிவுகளில் இருந்தும் 50 க்கு மேற்பட்ட போட்டியர்கள் பங்கு பற்றியது குறிப்பிடத்தக்கது.


இதில் தெரிவு செய்யப்படுபவர்கள் கிழக்கு மாகாணமட்ட கராத்தே போட்டியில் பங்கு பற்றவுள்ளதாக விளையாட்டு பிரதான போதனாசிரியர்  தெரிவித்தார்.