பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடக சந்திப்பில் அதிரடியாக கருத்து .

 

 

வரதன்

 இந்த பொது வேட்பாளர் என்பது ஒரு அரசியல்   உள்நோக்கம்  சுய லாபம்  கொண்டதாகும்.

 பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
சில தமிழ் கட்சிகள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் இந்த பொது வேட்பாளர் என்ற கருத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்  இதில் அவ்வித உண்மை தன்மையும் இல்லை அது சரியானதும் நியாயமானது என   நான் கருதவில்லை கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் தங்களது சுயலாபங்களுக்காக தீராத பிரச்சனைகளாகவே  அவர்கள் கடைப்பிடித்து வந்தனர் அவர்கள் தமிழ் சமூகத்திற்கு ஏற்ற நடைமுறைக்கு சாத்தியமான யதார்த்த முடிவுகளை எடுக்க வேண்டும்.
இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அரசியல்   உள்நோக்கம் கொண்ட. சுய லாபம்  கொண்டதாகும் அது. ஜனாதிபதி முக்கிய மூன்று வேட்பாளர் களுடன் எமது மக்களது பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடி அதன் பின்பு ஒரு உத்தரவாதத்தினை ஏற்படுத்திக் கொள்ள நாம் அவர்களை இணங்க வைக்க வேண்டும்.