பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ் மொழித் தின நிகழ்வு!














(கல்லடி செய்தியாளர்)

மாணவர்களின்  மொழி ஆற்றல் திறனை  மேம்படுத்தும்  முகமாகவும்,கலை கலாசாரத்தை  ஊக்கு விக்கும் வகையிலும் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ் மொழித் தின
விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மட்டக்களப்பு இந்துக் கல்லூரி   பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு  கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அதிபர் எஸ். பகீரதன் தலைமையில் நடைபெற்ற  கல்லூரித்
தமிழ் மொழித் தினப் போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் , கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.