டயானா கமகே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

 


இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடியகல்வு குடிவரவு சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதவான் விசாரணை தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.