மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் உத்தியோதர்களுக்கான சேவை நலன் சன்மானம் வழங்கி வைக்கும் நிகழ்வு!














(கல்லடி செய்தியாளர்)

கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  அஜித் ரோகனவின் பணிப்புரையில்
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான தலைமையில்   இடம் பெற்ற  மாவட்ட
பொலிஸ் உத்தியோதர்களுக்கான சேவை நலன்  சன்மானம் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்,
மட்டக்களப்பு மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  உதித்த  லியனகே  அதிதியாகக் கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  கடந்த மூன்று  மாத காலப் பகுதியில்  பொலிஸ் பாதுகாப்பு  கடமையின்  போது பொலிஸ்  உத்தியோதர்கள் ஆற்றிய  சேவையைப் பாராட்டிச் சன்மானம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில்  பணியாற்றிய பொலிஸாரின்

 சேவை நலனுக்காக   சன்மானமாக  பெறுமதியான பணப் பரிசில்களும்,சிறப்புச்சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.