வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

 


 

 மகாவலி அபிவிருத்தி எனும் பெயரில் தமிழ்ப் பூர்வீகக் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில் கவனவீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மகாவலி அபிவிருத்தி எனும் பெயரில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத் தக் கோரியும், குறித்த பிரதேசத்தில் மக்களின் காணிகளை ஆக்கிரமிக்கும் தனியார் விடுதி ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்பினர் வடக்கு மாகாண ஆளுநருக்கான மகஜர் ஒன்றும் ஆளுநர் செயலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் கடற்றொழில் சங்கங்கள் சார்பில் கையளிக்கப்பட்டது.

இந்தக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், பாதிக்கப்பட்ட மக்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.