2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம் பெற்றது

 







 

2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான grama sevaka (GS) நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில், புதன்கிழ​மை (08) நடைபெற்றது.

பரீட்சை திணைக்களத்தினால் 2023 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 2 ஆம் திகதி நடத்தப்பட்ட கிராம உத்தியோகபூர்வ பரீட்சையின் பெறுபேறுகளின்படி பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற 2100 விண்ணப்பதாரர்களுக்கு கிராம உத்தியோகபூர்வ நியமனம் வழங்கப்பட்டது.