2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

 


2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இம்முறை 3 லட்சத்து 87 ஆயிரத்து 648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65 ஆயிரத்து 331 தனியார் விண்ணப்பதாரர்களுமாக மொத்தமாக 4 லட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சார்த்திகள் நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 527 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இதேவேளை விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.